அஸ்ஸலாமு அலைக்கும்,
ஈத் பெருநாள் கொண்டாட்டம் 2019 – சிறப்பாக நடைபெற்று முடிந்தது,
05-06-2019 பெருநாள் அன்று மாலை நடைபெற்ற போட்டியில் த்ரோ பால், உள்ளே வெளியே, மியூசிக் சேர் போட்டிகள் நடைபெற்றன,
சுமார் 20 நபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 30 நபர்கள் கலந்து கொண்டு உற்சாகமாக விளையாடினார்கள், சிறப்பு போட்டியாக பலூன் சேலன்ஞ் நடத்தப்பட்டது,
முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு கோப்பை,பதக்கம்,பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது, முன்னதாக போட்டிகளை ஜனாப் G.M நெய்னா அவர்கள் துவங்கி வைத்தார்கள்,
போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழாவிற்கு கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் டாக்டர். M. S. #முஹம்மது_யூனுஸ் அவர்கள் தலைமை தாங்கினார்கள், பரிசளிப்பு விழாவில் பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் துணை தலைவர் ஜனாப் #இப்ராஹிம்_மாலிமார், ரஹிமா அறக்கட்டளை பொருளாளர் ஜனாப் U. #ஹபீப்ரஹ்மான் ,கிறீன் நோவோ அமைப்பு நிர்வாக இயக்குநர் ஜனாப் பசுமை ஹாஜி, சமூக ஆர்வலர் புதுவை.ஜனாப் #கஜ்ஜாலி, ஜனாப் S. I. #கவுஸ்ஹமீத், ரியாத் தமிழ் சங்க தலைவர் ஜனாப் #பக்ருதீன்,உருது ஆசிரியர் ஜனாப். #பலுலுத்தீன் , ஜனாப் #பாரூக்அலி(சிபிஐ), ஜனாப் #செய்யதுஅலி(காங்கிரஸ்) ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்,
போட்டிகளை ஜனாப் #ஹாஜிஅலி அவர்கள் தொகுத்து வழங்கினார்,
த்ரோ பால் :
முதல் இடம் : ஜாபர்
இரண்டாம் இடம்: முஹம்மது அலி
3வது இடம்: அலிம்
உள்ளே வெளியே :
முதல் இடம் : இஃபால்
இரண்டாம் இடம்: மஜித்
3வது இடம்: அரிப்
மியூசிக் சேர் :
முதல் இடம் : ஜமால் நாசர்
இரண்டாம் இடம்: சையாது அலி
3வது இடம்:அலிம்
src:SmartThamim
Leave A Comment